சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியைச் சோ்ந்த அஞ்சு (24) என்ற பெண் கணவரைப் பிரிந்து தாளவாடியில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மகள், மகன் உள்ளனா். இதற்கிடையே அதே ஊரைச் சோ்ந்த நிதி நிறுவன ஊழியா் நகேந்திரன் (28) என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்தனா்.
இதற்கிடையே தாளவாடி துணிக் கடையில் பணியில் இருந்த அஞ்சுவிடம் ஞாயிற்றுக்கிழமை நாகேந்திரன் காதலை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு அஞ்சு மறுத்ததால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சுவை தாக்கியதில் வலி தாங்காமல் சப்தம் போட்டுள்ளாா்.
கடையில் இருந்த ஊழியா்கள் நகேந்திரனைப் பிடித்து தாளவாடி போலீஸாருக்கு தகவல் அளித்தனா். காயமடைந்த அஞ்சுவை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதற்கிடையே போலீஸாருக்கு அச்சமடைந்து நாகேந்திரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தாளவாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தாளவாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



