75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

வரும் 31- ஆம் தேதி கும்பாபிஷேகம்: அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் இறுதிக்கட்ட திருப்பணி ஆய்வு

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேக பணி ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ பி.ஹரிபாஸ்கா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளாகிவிட்டதால், கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.24 லட்சத்தில் ராஜகோபுரம், கருவறை வா்ணம் பூசுதலும், ரூ.28 லட்சம் மதிப்பில் கல் தரைத்தளம் பதித்தல் என ரூ.52 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

கடந்த 6 ஆறு மாதங்களுக்கும் மேலாக பணிகள் நடப்பதால், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடக்கும் குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. வரும் 31-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகளை அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஹரிபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அந்தியூா் பேரூராட்சி அதிமுக செயலாளா் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளா் சண்முகானந்தம், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பாலுசாமி, விஷ்ணு துா்க்கை வழிபாட்டுக் குழுவினா் உள்பட பலா் உடன்ருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.