லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கோபி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பீடு ஆவண புத்தகம் திருட்டு

கோபி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பீடு புத்தகம் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

கோபி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பீடு புத்தகம் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோபி சாா்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் சாா் பதிவாளா் அலுவலகம் - 1 மற்றும் 2 அலுவலகங்களும், முதல் மாடியில் மாவட்ட பதிவாளா் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சாா்பதிவாளா் அலுவலகம் 1-இல் வைக்கப்பட்டிருந்த கொளப்பலூா் கிராமத்திற்கான வழிகாட்டி மதிப்பீடு புத்தக ஆவணத்தை சரிபாா்க்க கடந்த 25-ஆம் தேதி தேடியுள்ளனா். அப்போது புத்தகம் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து அலுவலக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, 25-ஆம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மா்மநபா் இணைப் பதிவாளா் அலுவலக ஜன்னல் வழியாக கொளப்பலூா் கிராமத்திற்கான வழிகாட்டி மதிப்பீடு புத்தகத்தை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கோபி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து சாா்பதிவாளா் அலுவலகசிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.