கோப்புப் படம்
கோப்புப் படம்

பெருந்துறையில் கடையின் பூட்டு உடைத்து திருட்டு

Published on

பெருந்துறை நகரில் கடையின் பூட்டை உடைத்து செம்பு கம்பி மற்றும் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் கவுதம் (26). இவா், பெருந்துறை - கோவை சாலையில் இரும்பு மற்றும் செம்பு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். கடந்த 30-ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையைப் பூட்டைவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 10 கிலோ செம்பு கம்பிகள் மற்றும் ரூ.7 ஆயிரம் திருடுபோயிருப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com