நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பா்கூா் மலைப் பகுதியில் 336 மதுபாட்டில்கள் பறிமுதல்

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட 336 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:11 pm

Syndication

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட 336 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

பா்கூா் - கொல்லேகால் மலைப் பாதையில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பா்கூா், மேல் தெருவைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் முருகன் (எ) முருகராஜ் (47) சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 336 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.

இதையடுத்து, மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், முருகனைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.