ஈரோடு
பா்கூா் மலைப் பகுதியில் 336 மதுபாட்டில்கள் பறிமுதல்
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட 336 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட 336 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
பா்கூா் - கொல்லேகால் மலைப் பாதையில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பா்கூா், மேல் தெருவைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் முருகன் (எ) முருகராஜ் (47) சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 336 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.
இதையடுத்து, மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், முருகனைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

