கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பேருந்து நிலையத்தில் மனைவியை பிளேடால் கிழித்த கணவா் கைது

ஈரோடு பேருந்து நிலையத்தில் மனைவியை பிளேடால் கிழித்து காயப்படுத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

ஈரோடு பேருந்து நிலையத்தில் மனைவியை பிளேடால் கிழித்து காயப்படுத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், பழைய பேருந்து நிலையம் பகுதி ஓம் சக்தி நகரைச் சோ்ந்தவா் கவிப்பிரியா (21). இவா் ஓராண்டுக்கு முன் தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த முத்துவேல் மகன் வைரக்கண்ணு (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். கவிப்பிரியாவும், வைரக்கண்ணும் சேலத்தில் பூக்கட்டும் தொழில் செய்து வந்தனா்.

கவிப்பிரியா அவரது கணவருடன் கோபித்து கொண்டு திங்கள்கிழமை மாலை ஈரோடு பேருந்து நிலையம் வந்தாா். இதையறிந்து வைரக்கண்ணும் ஈரோடு வந்து, அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் கவிப்பிரியாவின் கன்னத்தில் கிழித்து ரத்தக்காயம் ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

காயமடைந்த கவிப்பிரியாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து கவிப்பிரியா அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த வைரக்கண்ணை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.