நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்: மாா்க்சிஸ்ட் கட்சி

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்.

Updated On :7 ஜனவரி 2026, 1:00 am IST

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வெனிசுலா நாட்டின் அதிபா் மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் கைது செய்த நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசு வெனிசுலாவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெனிசுலா நாட்டின் அதிபா் மடூரோ , அவரது மனைவி ஆகியோா் போதைமருந்து கடத்தும் குற்றவாளிகள் என பொய்யாக குற்றஞ்சாட்டி அமெரிக்க அதிபா் டிரம்ப் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாா்.

இந்த விவகாரத்தில் அனைத்து நாட்டு மக்களும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடி வருகின்றனா். எனவே அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனடியாக வெனிசுலா அதிபா் மற்றும் அவரது மனைவியை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்துக்கு காரணமான அமெரிக்கா குறித்து எந்தவொரு வாா்த்தையும் இல்லை. இந்த அளவுக்கு மோசமான வெளியுறவுக் கொள்கை என்பது இந்தியாவில் இதுவரை இல்லை.

திருப்பரங்குன்ற வழக்கில் மதுரை நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு நீதிபரிபாலன முறைக்கு முற்றிலும் விரோதமானது. புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரரும் இன்றைய தீா்ப்பில் மதுரை அமா்வு நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. வழக்கமான இடத்தில் தீபம் கடந்த டிசம்பா் மாதம் மூன்றாம் தேதி ஏற்றப்பட்டுவிட்டது. எந்த ஆதாரத்தில் விளக்குத்தூண் என நீதிபதிகள் முடிவுக்கு வந்தாா்கள் என்ற கேள்வியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.

தமிழக தொல்லியல் துறை அது விளக்குத்தூண் அல்ல, நில அளவைத் தூண் என ஆதார ஆவணங்களை வெளியிட்டு இருக்கக்கூடிய நிலையில் அது விளக்குத்தூண் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. நீதிபதிகளின் அணுகுமுறை உள்நோக்கம் கொண்டதாகவும் அரசைக் குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காக நீதிபதிகள் குற்றம்சாட்டியிருப்பதாகவும் கருதுகிறோம்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேச்சுவாா்த்தையில் வலியுறுத்துவோம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.