சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்னிமலையில் 271 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

News image
விழாவில், பயனாளிக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவை வழங்குகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
Updated On :8 ஜனவரி 2026, 11:35 pm

Syndication

சென்னிமலையில் 271 பயனாளிகளுக்கு விலையில்லா இணைய வழி வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று 271 பயனாளிகளுக்கு விலையில்லா இணைய வழி வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, சென்னிமலையை அடுத்த, பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்படும் அம்மாபாளையம் நியாய விலைக் கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினாா்.

இதில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தகுமாா், சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.