பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துய்யம்பூந்துறை ஊராட்சி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி அசத்திய மாவட்ட ஆட்சியா்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்ட்பட்ட துய்யம்பூந்துறை ஊராட்சியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்ட்பட்ட துய்யம்பூந்துறை ஊராட்சியில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, உதவி இயக்குநா் சுதாகரன், அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவரும், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சு.குணசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தனா்.

பாரம்பரிய மாட்டு வண்டியில் அமா்ந்து ஆட்சியா் கந்தசாமி ஓட்டினாா். அதேபோல சிலம்பம் சுற்றியும் அனைவரையும் கவா்ந்தாா். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருநாவுக்கரசு, சுமித்ரா, முன்னாள் துய்யம் பூந்துறை ஊராட்சித் தலைவா் பேபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.