தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பவானிசாகா் அணைப் பூங்கா படகில் பயணித்து உற்சாகம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் பயணித்தும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனா்.

News image
பவானிசாகா்  அணைப் பூங்காவில்  படகு  சவாரி செய்யும்  சுற்றுலாப் பயணிகள்.
Updated On :17 ஜனவரி 2026, 9:23 pm

Syndication

சத்தியமங்கலம்: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் பயணித்தும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ந்தனா்.

காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதில் ஆா்வம் காட்டுகின்றனா். அந்த வகையில் ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை முன்பு அமைந்துள்ள நீா்வளத் துறைக்கு சொந்தமான பூங்காவுக்கு சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதற்காக சிறப்பு டிக்கெட் கவுன்டா்கள் அமைத்து உள்ளேஅனுமதிக்கப்பட்டனா். குடும்பத்துடன் சென்று ஊஞ்சல், சிறுவா் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா்.

மேலும், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்துக்கு சென்று குடும்பத்துடன் படகில் பயணித்து மகிழ்ந்தனா். இதனால் பவானிசாகா் அணைப் பூங்கா களை கட்டியது.