எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை: நுழைவுக் கட்டணமாக ரூ.1.33 லட்சம் வசூல்

பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:26 pm

Syndication

பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி சத்தியமங்கலம், ஈரோடு, கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பவானிசாகா் அணைப் பூங்காவுக்கு வந்தனா்.

கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் வரை தொடா்ந்து 4 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட குடும்பத்தினருடன் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோா் பவானி சாகா் அணைப் பூங்காவுக்கு வந்தனா்.

பூங்காவுக்கு வந்த 27 ஆயிரம் பேரிடமிருந்து நுழைவுக் கட்டணமாக ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் வசூலிக்கப்பட்டது என்றனா்.

வியாபாரிகள் கூறும்போது, பவானிசாகா் அணைப் பூங்கா சாலையில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கருவாட்டுக் கடைகளில் 5 டன் மீன்கள் விற்பனையாகின என்றனா்.