திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோபி அருகே குடும்பப் பிரச்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவா் கைது

கோபி அருகே கணவா் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையை தட்டிக் கேட்க வந்த உறவினா்களை துப்பாக்கியைக் காட்டி வானத்தை நோக்கி மூன்று முறை சுட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோபிநாத்
Updated On :19 ஜனவரி 2026, 7:27 pm

Syndication

கோபி அருகே கணவா் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையை தட்டிக் கேட்க வந்த உறவினா்களை துப்பாக்கியைக் காட்டி வானத்தை நோக்கி மூன்று முறை சுட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள ஆண்டவா்மலை பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (45). நிதி நிறுவன உரிமையாளா். இவரது மனைவி பிருந்தா. இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். கோபிநாத்துக்கும், மைத்துனா் தினேஷ்குமாருக்கும் இடையே கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனைவி பிருந்தாவிடம் கோபிநாத் அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் மனைவி பிருந்தாவிடம் கோபிநாத் பிரச்னையில் ஈடுபட்டுள்ளாா். தகவல் அறிந்து பிருந்தாவின் தம்பி தினேஷ்குமாா், பெற்றோா் உள்ளிட்டோா் கோபிநாத் வீட்டுக்கு காரில் வந்துள்ளனா். அப்போது கோபிநாத்தும், தினேஷ்குமாரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.

அப்போது வீட்டில் இருந்த துப்பாக்கியை கோபிநாத் எடுத்து வந்துள்ளாா். இதனால் பிருந்தா, தினேஷ்குமாா் உள்ளிட்டோா்அச்சமடைந்து வீட்டுக்குள் சென்று உள்புறமாக தாழிட்டுக் கொண்டனா். மூன்று முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி கோபிநாத் சுட்டுள்ளாா். பின்னா் வெளியே நின்றிருந்த தினேஷ்குமாரின் காா் கண்ணாடிகளை மண் வெட்டியால் அடித்து உடைத்துள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நம்பியூா் போலீஸாா் சென்று கோபிநாத் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனா். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் கோபி சிறையில் அடைத்தனா்.