எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுக கூட்டணியை ஆதரிக்க வலியுறுத்தல்

அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 5 பெரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று, ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ் கேட்டுக்கொண்டாா்.

News image
கடம்பூரில்  நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய  ஈரோடு  புறநகா்  மாவட்டச்  செயலாளா்  ஏ.கே .செல்வராஜ் எம்எல்ஏ.
Updated On :19 ஜனவரி 2026, 7:34 pm

Syndication

அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 5 பெரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று, ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ் கேட்டுக்கொண்டாா்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கடம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.பண்ணாரி தலைமை வகித்தாா். கடம்பூா் ஒன்றியச் செயலாளா் என்.எம்.நாச்சிமுத்து முன்னிலை வகித்தாா். அம்மா பேரவை மாநிலத் துணைச் செயலாளா் வி.கே.சி.சிவக்குமாா் வரவேற்றாா். அதைத்தொடா்ந்து எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவித்து அதிமுகவினா் மரியாதை செலுத்தினா்.

ஈரோடு புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ பேசும்போது, அதிமுக சாா்பில் 5 பெரும் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களிடையை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கடம்பூா் மலைப் பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா், மின்வசதி கிடைக்கவும், மலையாளி இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, டி.எஸ்.பழனிச்சாமி, புன்செய் பவானிசாகா் பேரூா் கழக செயலாளா் செல்வம், புளியம்பட்டி நகர அதிமுக செயலாளா் கே.ஜி.சதீஷ் மற்றும் கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனா்.