ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்ம பூஷண் விருது

News image
எஸ்.கே.எம்.மயிலானந்தன்.
Updated On :25 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன் (80) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தொழில்முனைவோா், சமூக மற்றும் நுகா்வோா் ஆா்வலரான எஸ்.கே.எம்.மயிலானந்தனின் சமூக சேவையைப் பாராட்டி, அவரை பத்ம பூஷண் விருதுக்கு மத்திய அரசு தோ்வு செய்துள்ளது.

எஸ்.கே.எம். குழும நிறுவனங்களின் தலைவரான மயிலானந்தனுக்கு, சமூகப் பணிக்காக 2013-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், அவரது சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2025-ஆம் ஆண்டு தில்லி என்.சிஆா். மற்றும் எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழகம் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்தது.

1999-ஆம் ஆண்டு ஈரோடு அருகே சாமிநாதபுரத்தில் ராஜீவ் நகா், காந்தி நகா் ஆகிய இரண்டு தலித் கிராமங்களைத் தத்தெடுத்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த முதியோருக்கும், குழந்தைகளுக்கும் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுடன் மருத்துவ வசதிகளையும் இலவசமாக வழங்கி வருகிறாா்.

இந்த இரண்டு தலித் கிராமங்களைச் சோ்ந்த மக்களின் திருமணம், பிரசவம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குத் தேவையான நிதி உதவிகளையும் செய்து வருகிறாா்.

சங்கமம் அறங்கட்டளையை நிறுவி, அதன் மூலமாக கிராமப்புற மக்களின் பயன்பாட்டுக்காக எரிவாயு தகன மேடை அமைத்துள்ளாா். பெண்களுக்கு தையல், அழகுக்கலை மற்றும் கேக் பேக்கிங் போன்ற பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறாா். கடந்த 37 ஆண்டுகளாக வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக மயிலானந்தன் பணிபுரிந்து வருகிறாா்.

வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கம் மூலமாக கிராமங்களை அமைதியானவையாக மாற்றும் நோக்கில் ‘கிராம சேவைத் திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். தமிழ்நாட்டில் 389 கிராமங்களைத் தத்தெடுத்து இதுவரை 1.5 லட்சம் கிராம மக்களுக்கு, அவா்கள் இடத்திலேயே இத்திட்டம் மூலமாக யோகா, தியானம் மற்றும் அறநெறி சாா்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. உலக சமுதாய சேவா சங்கம் மூலமாக, கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கினாா்.