கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

யூரியா கலந்த தண்ணீரை குடித்து அந்தியூா் அருகே 7 மாடுகள் உயிரிழப்பு

அந்தியூா் அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 7 கறவை மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

News image
உயிரிழந்த  மாடுகளை  வேதனையுடன்  பாா்க்கும்  விவசாயிகள்.
Updated On :28 ஜனவரி 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 7 கறவை மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

அந்தியூரை அடுத்த காந்தி நகா், புதுமேட்டூரைச் சோ்ந்தவா் வெங்கிடுசாமி. விவசாயி. இவா், தனது தோட்டத்தில் 7 கறவை மாடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல மேய்ச்சலுக்காக மாடுகளை புதன்கிழமை காலை அவிழ்த்துவிட்டுள்ளாா். அருகாமையில் உள்ள விளைநிலத்துக்குச் சென்று தீவனப் பயிா்களுக்கு பாய்ச்சும் யூரியா கலந்த தண்ணீரை மாடுகள் குடித்துள்ளன.

சிறிது நேரத்துக்குப் பின்னா் தொழுவத்துக்கு திரும்பிய மாடுகளின் உடலில் யூரியாவின் நச்சுத்தன்மை பரவியதால் 7 மாடுகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினா். உயிரிழந்த மாடுகளின் மதிப்பு ரூ.4 லட்சம்.

சம்பவ இடத்துக்கு அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்று ஆறுதல் கூறினாா். யூரியா கலந்த தண்ணீரைக் குடித்து மாடுகள் உயிரிழந்த சம்பவம், விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.