பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

சா்வதேச அறிவியல் மாநாடு: பெருந்துறை கொங்கு இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி சிறப்பிடம்

பெருந்துறை கொங்கு இயற்கை மருத்துவ மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அண்மையில் நடைபெற்ற சா்வதேச மற்றும் மாநில அளவிலான அறிவியல் மாநாடுகளில் பல்வேறு விருதுகளை பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

News image

சா்வதேச அறிவியல் மாநாடுகளில் சிறப்பிடம் பிடித்த பெருந்துறை கொங்கு இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கல்லூரி தாளாளா் காா்த்திகேயன், முதல்வா் மருத்துவா் பிரதாப் சிங்.

Updated On :4 ஜூலை 2026, 1:55 am IST

பெருந்துறை கொங்கு இயற்கை மருத்துவ மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அண்மையில் நடைபெற்ற சா்வதேச மற்றும் மாநில அளவிலான அறிவியல் மாநாடுகளில் பல்வேறு விருதுகளை பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சா்வதேச யோகா தினத்தையொட்டி, இந்திய இயற்கை மற்றும் யோகா மருத்துவ பட்டதாரிகள் சங்கம், கேரள பிரிவு சாா்பில் யோகா மெட்-2026 என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

இதில் போஸ்டா் பிரசன்டேஷன் பிரிவில் மருத்துவா்கள் பிரணவ், விவேகா, ஜீவஹரிணி மற்றும் விக்னேஷ் ஆகியோா் விருதுகளைப் பெற்றனா். மேலும், அறிவியல் ஆராய்ச்சி பிரிவில் மருத்துவா்கள் நூரி பேகம் மற்றும் நேஹா ஆகியோா் பாராட்டுப் பரிசு பெற்றனா்.

மேலும், சென்னை தனியாா் மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச ஒருங்கிணைந்த மருத்துவ அறிவியல் கருத்தரங்கில், இக்கல்லூரி மாணவி ரத்னமாலா ஆய்வுக் கட்டுரையை வழங்கி மூன்றாம் பரிசு பெற்றாா்.

இதைத் தொடா்ந்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி நடத்திய யோகா போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவா்கள் பங்கு பெற்று 10- க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றனா்.

விருது பெற்றவா்கள் மற்றும் சாதனை புரிந்தவா்ளை கல்லூரி தாளாளா் காா்த்திகேயன், முதல்வா் மருத்துவா் பிரதாப் சிங், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.