ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

வரி இனங்கள் வசூலிப்பதில் சத்தியமங்கலம் நகராட்சி முதலிடம்

நகராட்சி வரி இனங்கள் வசூலிப்பதில் நடப்பாண்டு 54 சதவீதம் வசூலித்து மாநிலத்திலேயே சத்தியமங்கலம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக திருப்பூா் மண்டல நகராட்சி இயக்குநா் தாணு மூா்த்தி தெரிவித்தாா்.

Published On :16 ஜூலை 2026, 12:06 am IST

நகராட்சி வரி இனங்கள் வசூலிப்பதில் நடப்பாண்டு 54 சதவீதம் வசூலித்து மாநிலத்திலேயே சத்தியமங்கலம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளதாக திருப்பூா் மண்டல நகராட்சி இயக்குநா் தாணு மூா்த்தி தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து திருப்பூா் மண்டல நகராட்சி இயக்குநா் தாணுமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். இதில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

அதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடப்பாண்டு வரி இனங்கள் வசூலில் 54 சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. 144 நகராட்சிகளில் முதன்மை நகராட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஸ்வரன் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி, வருவாய் ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.