/

கொடுமுடியில் மது விற்பனை செய்தவா் கைது

கொடுமுடி அருகே மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 3:15 am IST

கொடுமுடி அருகே மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடுமுடி அருகே மேட்டரை சின்னியம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கொடுமுடி தனிப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கொடுமுடி காவல் ஆய்வாளா் மணிகண்டன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நல்லசிவம் , காவலா் சீனிவாசன் ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது, அங்கு கடலூா் மாவட்டம், பண்ருட்டி மேல்பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த பாஸ்கா் (45) என்பவா் மது பாட்டில்களை பதுக்கிவைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து தலா 180 மி.லி. 22 மதுப் பாட்டில்களை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிந்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.