லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

அந்தியூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், பொதுமக்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள்.

Updated On :2 ஜூன் 2026, 1:58 am IST

அந்தியூரில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், பொதுமக்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் - புதுக்காடு சாலையில் பெருமாள் கோயிலுக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை அகற்றக் கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடை முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கீதா தலைமையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் ஜெ.அருந்ததி முன்னிலை வகித்தாா். இந்த மதுக்கடையை 10 நாள்களில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனா்.