லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:52 am IST

அந்தியூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் அண்ணாமடுவு துணை மின் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை மூடக்கோரி கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியனிடம் மனு அளித்தனா். ஆனால், மதுக்கடையை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஏமாற்றமடைந்த பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திரண்டு வந்து, டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பச்சாம்பாளையம் அருகே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பான சூழல் நிலவியது.