இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:52 am IST

அந்தியூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் அண்ணாமடுவு துணை மின் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை மூடக்கோரி கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியனிடம் மனு அளித்தனா். ஆனால், மதுக்கடையை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஏமாற்றமடைந்த பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திரண்டு வந்து, டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பச்சாம்பாளையம் அருகே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பான சூழல் நிலவியது.