லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:53 am IST

அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூடக் கோரி கடந்த மே மாதம் 22-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் அடுத்த 10 நாள்களில் மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும் என உறுதியளித்தனா்.

ஆனால், மதுக்கடை மூடப்படாமல் தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் மதுக்கடையை திறக்க விடாமல் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நிரந்தரமாக மூட வேண்டும் என அதிகாரிகள் அளித்த வாக்குறுதிப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, அடுத்த 3 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் கைபேசி மூலம் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

இதனால், போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றபோது, மதுக்கடை மூடப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறினா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.