சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:53 am IST

அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்த வருவோரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதனால், இந்த மதுக்கடையை மூடக் கோரி கடந்த மே மாதம் 22-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் அடுத்த 10 நாள்களில் மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும் என உறுதியளித்தனா்.

ஆனால், மதுக்கடை மூடப்படாமல் தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் மதுக்கடையை திறக்க விடாமல் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நிரந்தரமாக மூட வேண்டும் என அதிகாரிகள் அளித்த வாக்குறுதிப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, அடுத்த 3 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் கைபேசி மூலம் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

இதனால், போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றபோது, மதுக்கடை மூடப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறினா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.