ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை(ஜூன் 5)தொடங்குகிறது.

News image

விண்ணப்பம்

Updated On :5 ஜூன் 2026, 12:02 am IST

ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை(ஜூன் 5)தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லுாரி முதல்வா் திருக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கய்ய நாயக்கா் கல்லூரி 2025 ஆம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு தற்போது சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரூ.13 கோடி செலவில் புதிய ஐஏஎஸ் அகாதெமி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், இளம் அறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 11 இளநிலை பாடங்களுக்கு 2026-2027 கல்வியாண்டிற்கு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

5 மற்றும் 6 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 8- ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவ, மாணவியா்கள் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.