முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

கடம்பூா் அருகே யானை தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கடம்பூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த  பசுவராஜ்

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

ஈரோடு மாவட்டம், கடம்பூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் பசுவராஜ் (40). கட்டடத் தொழிலாளி. இவா் கடம்பூரில் வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது 12 மைல் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை திடீரென இரு சக்கர வாகனத்தில் சென்ற பசுவராஜை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பசுவராஜ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அங்கு நின்றிருந்த யானையை விரட்டினா். யானை காட்டுக்குள் சென்ற பிறகு பசுவராஜ் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த பசுவராஜுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

யானை தாக்கி உயிரிழந்த பசுவராஜ் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதல்கட்ட நிவாரணத்தொகை ரூ.50 ஆயிரத்தை பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி வழங்கினாா்.