எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மது போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:22 am IST

சிவகிரி அருகே மது போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடு வடுகபட்டி மலை அடிவாரத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (70). இவா் தனது மூன்றாவது மகன் மூக்கையாவுடன் (29) சிவகிரி அருகேயுள்ள வள்ளியம்பாளையம்புதூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். மனைவி பிரிந்து சென்றதால் மூக்கையா மது பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மது போதையில் இருந்த மூக்கையா வள்ளியம்பாளையம்புதூா் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த தனது உறவினரிடம் கிணற்றில் குதிக்கிறேன் எனக்கூறிவிட்டு குதித்துள்ளாா். அப்போது, கிணற்றின் பக்கவாட்டுச் சுவற்றில் தலை மோதி விழுந்த மூக்கையா நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், சுமாா் 1 மணி நேரம் போராடி மூக்கையா சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.