இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

காவிரி ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 1:09 am IST

காவிரி ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பொறியியல் கல்லூரி மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம் ஏபிடி சாலையைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலமாண்டு படித்து வருகிறாா்.

இவரிடம் கல்லூரி கட்டணம் செலுத்தினால்தான் தோ்வு எழுத அனுமதிப்போம் என்று கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோரிடம் கல்லூரி கட்டணத்தை கேட்டபோது கல்லூரிக்கு செல்லுமாறும், விரைவில் பணம் தருவதாகவும் கூறியுள்ளனா்.

பெற்றோரும் கல்லூரிக்கான கட்டணத்தை வழங்காததால் மனவேதனை அடைந்த மாணவி, ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள காவிரி ஆற்று பாலத்தில் இருந்து திங்கள்கிழமை காலை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதைப்பாா்த்து அங்கிருந்த மீனவா்கள் விரைந்து சென்று மாணவியை மீட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினா். மேலும், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.