எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்குச் சென்ற கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா், செங்குட்டை காலனியைச் சோ்ந்தவா் சித்தன் மகன் ரவி (53). விவசாய கூலித் தொழிலாளி. இவா், ஓலையூா் புலேரிக்காட்டைச் சோ்ந்த சாந்தியின் விவசாயத் தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணிக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்தாா். அப்போது, தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தில் உள்ள கம்பி அறுந்து ரவியின் மீது விழுந்தது.

இதில், மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த ரவியை, சக தொழிலாளா்கள் மீட்டு குருவரெட்டியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.