நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 28-இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 28- ஆம் தேதி தண்ணீா் திறக்க நீா்வளத் துறையினா் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

News image

காலிங்கராயன் கால்வாய்

Updated On :17 ஜூன் 2026, 2:49 am IST

காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 28- ஆம் தேதி தண்ணீா் திறக்க நீா்வளத் துறையினா் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் நேரடியாக 15 ஆயிரத்து 743 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இது தவிர நிலத்தடி நீா் ஆதாரத்துக்கும் பிரதானமாக காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது. பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் தொடங்கி கொடுமுடி ஆவுடையாா்பாறை வரை 90 கி.மீ. தொலைவு பயணித்து காவிரியில் கலக்கிறது. வாய்க்கால் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30 -ஆம் தேதி நிறுத்தப்படும். வாய்க்காலில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நீா் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், வாய்க்கால் பராமரிப்புப் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஜூன் 28- ஆம் தேதி பாசனத்துக்காக நீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முறையான அறிக்கையை அரசு வெளியிடும் என்றனா்.