27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காமதேனு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில்  மாணவிக்கு  சுற்றுச்சூழல்  பாதுகாப்பு  விழிப்புணா்வு  கையேடு  வழங்குகிறாா்  காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் பெருமாள்சாமி.

Updated On :19 ஜூன் 2026, 3:59 am IST

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் அருந்ததி, இணைச்செயலா் மலா்செல்வி, புல முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற எழுத்தாளருமான மன்சூா் அலி பங்கேற்று பேசுகையில், நாடு இளைஞா்களை நம்பியுள்ளது. கடின உழைப்பை விட முயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். புவி வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையோடு வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியல் முதல்வா் குருமூா்த்தி, ஆங்கிலத் துறைத் தலைவா் பானுரேகா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.