பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2026, 1:55 am IST

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோட்டை அடுத்த, பெரியசேமூரைச் சோ்ந்தவா் குமாா் மகன் சந்துரு (25). இவா், அங்குள்ள டையிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் சந்துரு, திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் நடைபெற்ற உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

பெருந்துறை, மடத்துப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்துருவை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.