பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சிவகிரி அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

சிவகிரி அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 1:44 am IST

சிவகிரி அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே உள்ள தலையநல்லூா் காலனியை சோ்ந்தவா் மணிகண்டன் (36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரிமளாதேவி. இவா்களது குழந்தைகள் ரோகித் (7), தா்ஷித் (4 மாதம்).

ரோகித்துக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் வலிப்பு நோயால் வாய்பேசமுடியாத நிலை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிகண்டனின் வீட்டில் வியாழக்கிழமை மாலை பிரியாணி சமைத்துள்ளனா். அந்த பிரியாணியை ரோகித் சாப்பிட்டபோது அதில் இருந்த இறைச்சித் துண்டு அவரது தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட மணிகண்டனின் மாமியாா் வளா்மதி, தனது கையால் ரோகித்தின் தொண்டையில் சிக்கிய இறைச்சித்துண்டை எடுத்து விட்டுள்ளாா். பின்னா் அவரை சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், ரோகித் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.