ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கோபியைச் சோ்ந்த இளைஞா் உள்பட 600 போ் அபுதாபியில் சிக்கித் தவிப்பு

News image
விமானங்கள் ரத்து!- AP
Updated On :1 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

கோபியைச் சோ்ந்த இளைஞா் உள்பட 600 போ் அபுதாபியில் சிக்கித் தவித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கோபி கருமாயா எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சோ்ந்தவா் வேலுமணி மகன் கெளதம் பிரபு (27). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் சென்னை, மும்பை கிளையில் பணியாற்றி வரும் 600 பேருடன் கெளதம் பிரபுவும் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கடந்த 27-ஆம் தேதி சென்றுள்ளாா். மாா்ச் 1-ஆம் தேதி நாடு திரும்புவதாக இருந்தது.

இந்நிலையில், ஈரானில் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக அரபு நாடுகளிலிருந்து புறப்படுவதாக இருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், அபுதாபியில் இருந்து அவா்கள் நாடு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மகன் உள்பட அபுதாபியில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியா்களையும் பத்திரமாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெளதம் பிரபுவின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.