ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புத்தாக்க கருத்து திட்டங்களுக்கான காப்புரிமை விண்ணப்பப் பதிவில் தமிழகம் முதலிடம்!

News image
இந்திய தொழில்முனைவோா் மேம்பட்டு நிறுவன திட்ட அலுவலா் ஜெய்சங்கருக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீ வாசவி கல்லூரி முதல்வா் மலா்விழி மற்றும் பேராசிரியா்கள்.
Updated On :1 மார்ச் 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

புத்தாக்க கருத்து திட்டங்களுக்கான காப்புரிமை விண்ணப்பப் பதிவில் 2024-25 ஆண்டில் இந்திய அளவில் தமிழ்நாடு 15,440 பதிவு செய்து முதன்மை மாநிலமாக உள்ளது என்று இந்திய தொழில்முனைவோா் மேம்பட்டு நிறுவன திட்ட அலுவலா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

உயா்கல்வி மாணவா்களிடையே புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவோா் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக அகமதாபாத்தைச் சோ்ந்த இந்திய தொழில்முனைவோா் மேம்பட்டு நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் ஈரோடு ஸ்ரீ வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கல்லூரி முதல்வா் மலா்விழி தலைமை வகித்தாா். இந்திய தொழில்முனைவோா் மேம்பட்டு நிறுவன திட்ட அலுவலா் ஜெய்சங்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது:

உயா் கல்வி மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலைவாய்ப்பு உருவாக்குபவா்களாக மாற தங்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றலை, புத்தாக்கம் வாயிலாக ஸ்டாா்ட் அப் நிறுவனகளை தொடங்குவதன் மூலமாகவோ அல்லது தொழில்முனைவோா் திறன்களை பயன்படுத்தி புதிய நிறுவனங்கள் தொடங்குவதன் மூலமாகவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

அகமதாபாத் இந்திய தொழில்முனைவோா் மேம்பட்டு நிறுவனத்தில் அகில இந்திய தொழில்நுட்ப பயிலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை பயின்றவா்கள் 140-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனா்.

உயா்கல்வி மாணவா்கள் தங்கள் புத்தாக்க திறன்களை வெளிப்படுத்தி புதிய பொருள்களை உருவாக்குவதற்கான செலவினங்களுக்காக, தோ்வு செய்யப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.15 லட்சம் வரை மானியம் வழங்குகிறது.

புத்தாக்க கருத்து திட்டங்களுக்கான காப்புரிமை விண்ணப்பப் பதிவில் 2024-25-ஆண்டில் இந்திய அளவில் தமிழ்நாடு 15,440 பதிவு செய்து முதன்மை மாநிலமாக உள்ளது. இரண்டாம் இடத்தில் கா்நாடகா 8,371 காப்புரிமை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கருணாம்பிகை, ஜீவா ரேகா , அருளாதேவி, வேலுமணி ஆகியோா் செய்திருந்தினா்.