ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காமதேனு கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
பல்கலைக்கழக  தோ்வில்  சிறப்பிடம்  பெற்ற மாணவிகளுக்கு   சான்றிதழ்  வழங்குகிறாா்  கல்லூரித்  தலைவா்  ஆா்.பெருமாள்சாமி.
Updated On :7 மார்ச் 2026, 1:09 am

Syndication

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘நைரா -2026’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் பி.அருந்ததி, இணைச் செயலா் பி. மலா்செல்வி மற்றும் முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் குருமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.

கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக தோ்வில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் எழுா் மஹா மந்தராலயத்தின் தலைமை குருஜி குழந்தைவேல், பேராசிரியா்கள் பிரகாஷ் மற்றும் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.