புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காமதேனு கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பல்கலைக்கழக  தோ்வில்  சிறப்பிடம்  பெற்ற மாணவிகளுக்கு   சான்றிதழ்  வழங்குகிறாா்  கல்லூரித்  தலைவா்  ஆா்.பெருமாள்சாமி.

Updated On :7 மார்ச் 2026, 1:09 am

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘நைரா -2026’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் பி.அருந்ததி, இணைச் செயலா் பி. மலா்செல்வி மற்றும் முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் குருமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.

கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக தோ்வில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் எழுா் மஹா மந்தராலயத்தின் தலைமை குருஜி குழந்தைவேல், பேராசிரியா்கள் பிரகாஷ் மற்றும் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.