நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா்

News image

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். உடன், நீா்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 1:43 am IST

பவானி: அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். விவசாயிகளின் கோரிக்கையைத் தொடா்ந்து நடப்பு ஆண்டு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் திங்கள்கிழமை தண்ணீரைத் திறந்துவைத்தாா். 33.46 அடி உயரமுள்ள அணையில் நீா் இருப்பு 27.99 அடியாக உள்ளது.

100 நாள்கள் தொடரில் 6 நனைப்புகளாக (75 நாள்கள் தண்ணீா் திறப்பு - 25 நாள்கள் தண்ணீா் நிறுத்தம்) எனும் அடிப்படையில் 85.881 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 2,924 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஷா்மிளா, உதவிப் பொறியாளாா்கள் எல்.கிருபாகரன், சுலைமான், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் குருசாமி (சங்கராபாளையம்), சரவணன் (மைக்கேல்பாளையம்), பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.