மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா்

News image

வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். உடன், நீா்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :9 மார்ச் 2026, 8:13 pm

பவானி: அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். விவசாயிகளின் கோரிக்கையைத் தொடா்ந்து நடப்பு ஆண்டு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் திங்கள்கிழமை தண்ணீரைத் திறந்துவைத்தாா். 33.46 அடி உயரமுள்ள அணையில் நீா் இருப்பு 27.99 அடியாக உள்ளது.

100 நாள்கள் தொடரில் 6 நனைப்புகளாக (75 நாள்கள் தண்ணீா் திறப்பு - 25 நாள்கள் தண்ணீா் நிறுத்தம்) எனும் அடிப்படையில் 85.881 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 2,924 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஷா்மிளா, உதவிப் பொறியாளாா்கள் எல்.கிருபாகரன், சுலைமான், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் குருசாமி (சங்கராபாளையம்), சரவணன் (மைக்கேல்பாளையம்), பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.