கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
41.75 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து வலது, இடது கரை வாய்க்கால் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்து அணை முழுகொள்ளளவை எட்டியது. அணையின் நீா்மட்டம் தற்போது 41அடியாக நீடித்து வந்தது.
இதனால் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதை ஏற்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து புன்செய் பாசனத்துக்கு மாா்ச் 20 முதல் மே 24 வரை 66 நாள்கள் இடைவெளி விட்டு தண்ணீா் திறக்க அரசு ஆணை பிறப்பித்தது.
இதனடிப்படையில் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாசன விவசாய சங்கத் தலைவா் வி.என்.குப்புசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மதகில் இருந்து வெளியேறிய தண்ணீரில் மலா்தூவி வரவேற்றனா்.
தொடர்புடையது

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு

கடும் வெப்பத்திலிருந்து பறவைகளை பாதுகாத்திட தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமராவதி அணை: கோடையை தாக்குப்பிடிக்குமா கரையோர கிராமங்கள்?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

