ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கோபியில் ரூ. 2.35 லட்சம் பறிமுதல்

கோபியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.35 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 1:24 am IST

கோபியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.35 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடிவேரி பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவபிரகாஷ் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் ஏளுா்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த பாக்கு வியாபாரி சைதலவி (51) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரு.1.35 லட்சத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.