தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 4:46 am IST

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 379 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மது விற்பனை இல்லாத நாளாக அறிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியாா் பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். இதில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 17 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த 379 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.