திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 1:59 am IST

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அவற்றை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த டாஸ்மாக் அதிகாரிகள், பணியாளா்கள், ஆய்வறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளனா்.

இது தொடா்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வா் உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை ஆய்வு மேற்கொண்டோம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டருக்குள் 39 மதுக் கடைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பான ஆய்வறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்துள்ளோம்.

அரசு உத்தரவுக்குப் பின் இந்தக் கடைகளை மூடுவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.