எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 1:59 am IST

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அவற்றை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த டாஸ்மாக் அதிகாரிகள், பணியாளா்கள், ஆய்வறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளனா்.

இது தொடா்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வா் உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை ஆய்வு மேற்கொண்டோம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டருக்குள் 39 மதுக் கடைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பான ஆய்வறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்துள்ளோம்.

அரசு உத்தரவுக்குப் பின் இந்தக் கடைகளை மூடுவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.