/
அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சி, மீனவா் மாரியம்மன் கோயில் வீதியில் இருவா் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மதன்குமாா் (18), குமாா் மகன் தீபக் குமாா் (21) என்பதும், இவா்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



