
மாநில அளவிலான வளையப் பந்து: காஞ்சிக்கோயில் அரசுப் பள்ளி தகுதி
மாநில அளவிலான வளையப் பந்து போட்டிக்கு காஞ்சிகோவில் அரசுப் பள்ளி தகுதி பெற்றுள்ளது.

மாவட்ட வளையப் பந்து போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற காஞ்சிக்கோயில் அரசுப் பள்ளி மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்.
மாநில அளவிலான வளையப் பந்து போட்டிக்கு காஞ்சிகோவில் அரசுப் பள்ளி தகுதி பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்ட அளவிலான வளையப் பந்து போட்டி, பவானி ஒன்றியம், பெரியபுலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று விளையாடிய, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான ஒற்றையா் மற்றும் இரட்டையா் என ஆறு போட்டிகளிலும் முதலிடம் பிடித்தனா். இதையடுத்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
போட்டிகளில் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள், தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






