மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

உதகை கோடை சீசன்: முதல்முறையாக சுற்றுலா போலீஸார் அறிமுகம்

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக சுற்றுலா போலீஸார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:28 am IST

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக சுற்றுலா போலீஸார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உதகையில் கோடை சீசனையொட்டி, மாவட்ட நிர்வாகம்,  மாவட்ட காவல் துறை, உதகை நகராட்சி சார்பில் போக்குவரத்தையும்,  வாகன நெரிசலையும் கட்டுப்படுத்த பல்வேறு விதமான உத்திகள் புதிதாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,  எதிர்வரும் கோடை சீசனையொட்டி போக்குவரத்துப் பிரச்னைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது: 
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் போலீஸார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இங்குள்ள பலரும் தங்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டுவதில் முறையாக நடந்து கொள்ள வேண்டும்.  கனிவான நடத்தை, கனிவான பேச்சு  மூலமாக நீலகிரி போலீஸாரின் பெருமை பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.