டெங்கு நோய் வராமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உதகையில் பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் அந்தந்த பகுதியில் டெங்கு நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். துண்டுப் பிரசுரங்களும் வழங்குகின்றனர்.
அதில், "கொசு உற்பத்தியைத் தடுக்க ஆட்டுக்கல், சிமென்ட் தொட்டிகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் கேன்கள், பானைகள், பிளாஸ்டிக் டிரம்கள், சட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவற்றுக்குள் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன' என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









