வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மாவட்டத்தில் முதன்முறையாக கண்ணாடி இழை  அதிவேக இணைய சேவை துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து  கண்ணாடி

Updated On :25 டிசம்பர் 2018, 5:54 am IST

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து  கண்ணாடி இழை  இன்டெர்நெட் சேவையை  திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.
பிஎஸ்என்எல்  நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் முரளிதரன் இதைத் தொடங்கிவைத்தார். 
முதல்கட்டமாக  குன்னூர்,  மவுண்ட் பிளசண்ட்  வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெற்று பயன்பெறலாம்.
அதிவேக இன்டர்நெட் சேவை, 24 மணி நேரம்  இலவச வாய்ஸ் அழைப்புகள் வசதி உள்ளன. இந்த சேவையின் மூலம்  வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள  ஸ்மார்ட் கருவியின் மூலம் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்களையும்  இயக்க முடியும். 
நீலகிரி மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் படிப்படியாக வெகுவிரைவில் இந்த சேவையை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  கேபிள் டி.வி. 
ஆபரேட்டர்களிடம்  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக   பிஎஸ்என்எல் முதன்மைப் பொதுமேலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.