தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

உதகை  நகராட்சியில் தெருவிளக்குகளை பராமரிக்க சிறப்பு வாகனம் அறிமுகம்

உதகை நகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகளைப் பராமரிக்க சிறப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 3:11 am

உதகை நகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகளைப் பராமரிக்க சிறப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏணியுடன் கூடிய இந்த நவீன தானியங்கி வாகனத்தின் இயக்கத்தை உதகை நகர்மன்ற ஆணையர் ரவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்துப் பேசியதாவது:
உதகை நகராட்சியில் 14-ஆவது மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் தெருவிளக்குகளைப் பராமரிக்க ஏணியுடன் கூடிய தானியங்கி வாகனம் ரூ. 29 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. 
இந்த நகராட்சியின் 36 வார்டுகளில் 4,700 தெருவிளக்குகள் மற்றும் 22 உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. 
இந்நகரம் சுற்றுலாத் தலமாகவும்  உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். இந்நிலையில்,  தெருவிளக்குகளை உடனுக்குடன் பராமரிக்க வசதியாக இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.