ஆறாமைல் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சூர் அருகே ஆறாமைல், காத்தாடிமட்டம், பாலகொலா, நுந்தளாமட்டம், அதிகரட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.
வனப்பகுதியொட்டு அமைந்துள்ள இக்கிராமங்களில் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் உள்ளன. உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்கள் கிராமப் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்து வருகின்றன.
ஆறாமைல் பகுதியில் சுற்றித்திரியும் 100க்கு மேற்பட்ட குரங்குகள் குடியிருப்புகளில் நுழைந்து வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்துவதுடன் குழந்தைகளையும், பெரியவர்களையும் தாக்கி அச்சுறுத்தும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாத நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

