குன்னூரில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனி தாக்கம் குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்கி பிப்ரவரி வரை பனிப் பொழிவு காணப்படும். இதில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். சில சமயங்களில் மார்ச் முதல் வாரம் வரையிலும் பனிப் பொழிவு காணப்படும்.
இந்த ஆண்டு நவம்பரில் துவங்கி கடந்த 4 மாதங்களாக உறைபனி கொட்டித் தீர்த்தது. துவக்க நாள்களில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டபோதிலும், பிறகு பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். கடும் பனிப் பொழிவால் ஜனவரி முழுக்க நீலகிரி மாவட்டத்தில் குளிர் வாட்டியெடுத்தது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல நாள்கள் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றது. பனியின் தாக்கம் 4 மாதங்களாக நீடித்த நிலையில் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களும் , காய்கறித் தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில்
தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. குளிரும் குறைந்து காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


