இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குன்னூரில் குறைந்தது உறைபனி தாக்கம்

குன்னூரில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனி தாக்கம் குறைந்துள்ளது. 

Updated On :13 பிப்ரவரி 2019, 7:49 am IST

குன்னூரில் இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனி தாக்கம் குறைந்துள்ளது. 
 நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்கி பிப்ரவரி வரை பனிப் பொழிவு காணப்படும். இதில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். சில சமயங்களில் மார்ச் முதல் வாரம் வரையிலும் பனிப் பொழிவு காணப்படும். 
    இந்த ஆண்டு நவம்பரில் துவங்கி கடந்த 4 மாதங்களாக உறைபனி கொட்டித் தீர்த்தது. துவக்க நாள்களில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டபோதிலும், பிறகு பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை பனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் தெரிவித்தனர். கடும் பனிப் பொழிவால் ஜனவரி முழுக்க நீலகிரி மாவட்டத்தில் குளிர் வாட்டியெடுத்தது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல நாள்கள் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றது. பனியின் தாக்கம் 4 மாதங்களாக நீடித்த நிலையில் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களும் , காய்கறித் தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில் 
தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
   இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.  குளிரும்  குறைந்து காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.