மாவட்டத்தில் இம்மாதம்14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இறுதிக் கட்டமாக மூன்று நாள்கள் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக திமுக மாவட்ட செயலர் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக கொள்கை பரப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தலைமையில் வரும் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு உதகை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நஞ்சநாடு பகுதியிலும், பகல் 12 மணிக்கு இத்தலார் பகுதியிலும், பிற்பகல் 1 மணிக்கு எமரால்டு பகுதியிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதேபோல, 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தொரையட்டி பகுதியிலும் பகல் 12 மணிக்கு எப்பநாடு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
மாவட்டத்தில் இதன் மாவட்ட நிறைவு நிகழ்ச்சி 16ஆம் தேதி தெங்குமரஹாடா கிராமத்தில் நடைபெறவுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது

மக்களுக்கு உழைக்கவே தவெகவில் இணைந்தேன்!பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா்

உலக சாம்பினை வீழ்த்தி சாத்விக் -சிராக் அசத்தல்: இறுதிக்கு தகுதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


