நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நீலகிரியில் இறுதிக்கட்ட  ஊராட்சி சபை கூட்டங்கள்

மாவட்டத்தில்  இம்மாதம்14ஆம் தேதி முதல்  16ஆம் தேதி வரை இறுதிக் கட்டமாக மூன்று நாள்கள் ஊராட்சி சபைக் கூட்டங்கள்

Updated On :13 பிப்ரவரி 2019, 7:49 am IST

மாவட்டத்தில்  இம்மாதம்14ஆம் தேதி முதல்  16ஆம் தேதி வரை இறுதிக் கட்டமாக மூன்று நாள்கள் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக  திமுக மாவட்ட செயலர் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக அவர்  தெரிவித்துள்ளதாவது: 
   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில்  கடந்த ஜனவரி 9ஆம் தேதி  முதல் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக கொள்கை பரப்புச் செயலரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா  தலைமையில் வரும் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு  உதகை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நஞ்சநாடு  பகுதியிலும்,  பகல் 12 மணிக்கு  இத்தலார் பகுதியிலும், பிற்பகல் 1 மணிக்கு  எமரால்டு பகுதியிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 
 அதேபோல, 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தொரையட்டி பகுதியிலும் பகல் 12 மணிக்கு எப்பநாடு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 
 மாவட்டத்தில் இதன் மாவட்ட நிறைவு நிகழ்ச்சி 16ஆம் தேதி தெங்குமரஹாடா கிராமத்தில் நடைபெறவுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.