முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கோத்தகிரியில் தண்ணீர்த் தட்டுப்பாடு: ஊர் மக்கள் அவதி

கோத்தகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால்  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:34 am IST

கோத்தகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால்  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி நகரப் பகுதிக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அளக்கரை மெகா குடிநீர்த் திட்டம்  நிறைவடைந்து மூன்றாண்டுகள் ஆகியும்கூட இன்னும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இதனால், ஈளாடா தடுப்பணைத் தண்ணீரையே நகர மக்கள் நம்பியுள்ளனர்.
சக்திமலை, ராம்சந்த் பகுதியில் நீரேற்றப்படும் தண்ணீர் தாழ்வான பகுதிகளுக்கு பேரூராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் சுமாராகப் பெய்த மழையால் அணையில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆனால்,  தண்ணீரை முறையாக விநியோகிக்கப்படாததால் நகர பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
சீரான முறையில் தண்ணீர் விநியோகிக்கப் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.