

உதகையில் நடைபெற்ற வங்கியாளா் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா 13 பயனாளிகளுக்கு ரூ.28.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
உதகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வங்கியாளா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாட்கோ மூலம் குன்னூா் கரன்சி பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவருக்கு ரூ. 8.04 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய சரக்கு வாகனம், சுய தொழில் துவங்க 4 பயனாளிகளுக்கு ரூ.11.02 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் விவசாயக் கடன் அட்டைகள், 2 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கடனுதவி என மொத்தம் ரூ.13 பயனாளிகளுக்கு ரூ.28.03 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பாபு, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யராஜா, தாட்கோ மேலாளா் ரவிசந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா் பகவத்சிங் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.